சாலையில் பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த காவல்துறை அதிகாரி

அமெரிக்காவில் விரைவுச்சாலை ஒன்றில் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து உதவியுள்ளார் காவல்துறை அதிகாரி ஒருவர்.

அதிகாரி பிரசவம் பார்த்ததை அவர் உடலில் பொருத்தியிருந்த படபிடிப்புக் கருவிகள் பதிவுசெய்திருந்தன.

இந்நிகழ்வு ஃபுளோரிடாவில் ஏப்ரல் 30ஆம் தேதி  நடந்தது.

காரில் கர்ப்பிணியும் அவரது கணவரும் சென்றுகொண்டிருந்த போது பெண்ணிற்கு திடீரென வலி எடுத்தது. அதைத்தொடர்ந்து பெண்ணின் கணவர் அவசர உதவிக்கு எண்ணுக்கு அழைத்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த டேனியல் ஜோன்ஸ் என்னும் அதிகாரி மேலும் சில உதவிகள் கேட்டு மற்ற பிரிவு அதிகாரிகளையும் அழைத்தார்.

பிரசவ வலியில் துடித்த பெண்ணைக் கண்ட அதிகாரி களத்தில் இறங்கி தாமே பிரசவம் பார்க்கத் தொடங்கினார். இறுதியில் தாயையும் சேயையும் எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் காப்பாற்றினார்.

தம்பதிக்கு இது ஆறாவது குழந்தையாம்.

ஜோன்ஸ் விரைவுச்சாலையில் இதுவரை மூன்று முறை பிரசவம் பார்த்து உதவியுள்ளாராம். 

அதிகாரியின் உதவியைப் பாராட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!