அம்பெய்தி நாயைக் காயப்படுத்தியவர் சிறையில் அடைப்பு

கோழிகளைக் கொன்றதால் பழிவாங்கினார்

ஜேஜு: அம்பெய்தி தெருநாயைக் காயப்படுத்திய ஆடவருக்குத் தென்கொரிய நீதிமன்றம் வியாழக்கிழமையன்று (மார்ச் 14) பத்து மாதச் சிறைத்தண்டனை விதித்தது.

ஜேஜூ தீவுப் பகுதியைச் சேர்ந்த அந்த ஆடவர், கடந்த 2022 ஆகஸ்ட் 25ஆம் தேதி இக்குற்றச் செயலைப் புரிந்தார்.

கடந்த காலத்தில் தனது கோழிகளை அந்த நாய் கடித்துக் கொன்றுவிட்டதால், அதற்குப் பழிவாங்கும் வகையில் அவ்வாறு செய்ததாக அந்த ஆடவர் கூறினார்.

முதுகில் அம்பு பாய்ந்த நிலையில் அந்த ஆண் நாய் சுற்றித் திரிந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, இச்சம்பவம் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வலம் வந்தது.

கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் இணையம் வழியாக 20 அம்புகளை வாங்கினார் அந்த ஆடவர். பின்னர் மரக்கழியையும் மீன்பிடிக் கம்பியையும் கொண்டு, அவரே சொந்தமாக ஒரு வில்லைச் செய்தார்.

தான் விட்ட அம்பு அந்த நாயைத் தாக்கும் என நினைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் சொன்னார், 40 வயதுகளில் இருக்கும் அந்த ஆடவர்.

அம்பு பாய்ந்த அந்த நாய்க்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சியோஞ்சி எனப் பெயரிடப்பட்ட அதனை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் தத்தெடுத்து, சென்ற ஆண்டு நவம்பரில் நியூயார்க்கிற்குக் கொண்டுசென்றுவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!