பாலியல் குற்றம்: சந்தேகப் பேர்வழியைக் கைதுசெய்ய மறுத்த காவல்துறை

சோல்: பாலியல் குற்றத்தில் சந்தேகப் பேர்வழியாகக் கருதப்படுபவர் 80 வயதைத் தாண்டியவர் என்பதால் அவரைக் கைதுசெய்ய தென்கொரியக் காவல்துறை மறுத்துவிட்டது.

அவர் வயதானவர் என்பதும் தப்பியோட வாய்ப்பில்லை என்பதுமே அதற்குக் காவல்துறை கூறும் காரணங்கள்.

இவ்வாண்டு ஜூன் 2ஆம் தேதி அம்முதியவர் 80களில் உள்ள ஒரு மூதாட்டியை நோன்சானில் உள்ள அவரது வீட்டில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அதனைக் கண்ட அம்மூதாட்டியின் மகன், அம்முதியவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

சந்தேகப் பேர்வழி பிடிபட்டபோதும், அவரிடம் விசாரித்தபின் காவல்துறை அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டது.

அவரது வயதைக் கருத்தில்கொண்டும் அவரது தங்குமிடம் தெரியும் என்பதாலும், அவர் தப்பியோடக்கூடிய அபாயமில்லை எனக் கருதி, காவல்துறை அவரை விடுவித்துவிட்டது.

அந்த ஆடவர்மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சுமத்தும்படி வழக்கறிஞர் தரப்பைக் காவல்துறை கேட்டுக்கொண்டது. மீண்டும் அம்மூதாட்டியை நெருங்கக்கூடாது என்று எச்சரித்ததே தவிர, அவர்மீது வேறு நடவடிக்கை எதையும் காவல்துறை எடுக்கவில்லை.

“என் தாயார் வீட்டிற்குள்ளேயே முடங்கிவிட்டார். ஆனால், அந்த ஆடவரோ சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்,” என்று அம்மூதாட்டியின் மகன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!