வெல்லிங்டன்: நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் நேற்று 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நிலநடுக்கத்துக்குப் பிறகான அதிர்வுகள் ஏற்படக்கூடும் என நியூசிலாந்து நிலநடுக்க கண் காணிப்புச் சேவையான 'ஜியோ நெட் சைன்ஸ்' அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு தீவில் எச்சரிக்கை ஒலிகள் கேட்டதாகவும் குறைந்தது ஒரு கட்டடத்தில் இருந்தோர் அதனை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன. கற்பாறைகள் கடலுக்குள் நொறுங்கி விழுந்ததால் கடற்பகுதியில் தூசுமூட்டம் இருந்ததாக கிரைஸ்ட்சர்ச் நகர மன்ற அதி காரிகள் கூறினர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் கிரைஸ்ட்சர்ச் நகரில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 185 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. படம்: ராய்ட்டர்ஸ்
நியூசிலாந்தை உலுக்கிய 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
1 mins read
-

