நாட்டை விட்டு வெளியேற 827,921 பேருக்குத் தடை

நாட்டை விட்டு வெளியேற 827,921 பேருக்குத் தடை

1 mins read
11bf7baf-f41c-472b-a337-89e621a21c9d
-

கோலா­­­லம்­­­பூர்: 820,000க்கும் அதி­­­க­­­மான மலே­­­சி­­­யர்­­­களுக்கு நாட்டை விட்டு வெளி­­­யே­­­றத் தடை விதிக்­­­கப்­­­பட்­­­டுள்­­­ளது என்று உள்துறை அமைச்­­­சர் அகமது சாகித் ஹமிடி தெரி­­­வித்­­­துள்­­­ளார். 2011ஆம் ஆண்டு முதல் மலே­­­சி­­­யக் குடி­­­நுழைவுத் துறை இதுவரை மொத்த 827,921 மலே­­­சி­­­யர்­­­களை அந்தப் பட்­­­டி­­­ய­­­லில் சேர்த்துள்ளது. அந்தப் பட்­­­டி­­­ய­­­லில் 200,727 பேர் நொடித்­­­துப்­­­போ­­­ன­­­வர்­­­கள், 118,892 பேர் கல்விக் கடன் பெற்று அடைக்­­­கா­­­த­­­வர்­­­கள் என்று தெரி­­­விக்­­­கப்­­­பட்­­­டது. 520 பேர் பாது­­­காப்­­­பு­­­சார்ந்த குற்­­­றங்கள் புரிந்த­­­வர்­­­கள் என்றும் பிற 507,782 பேர் பிற­­­வகைக் குற்­­­றங்கள் புரிந்த­­­வர்­­­கள் என்றும் தெரி­­­விக்­­­கப்­­­பட்­­­டது.

"சம்பந்தப்­­­பட்ட அதி­­­கா­­­ரி­­­களி­­­ட­­­மி­­­ருந்து முறையான அனுமதி பெறா­­­விட்­­­டால் இந்தப் பட்­­­டி­­­ய­­­லில் உள்­­­ள­­­வர்­­­கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற முடியாது," என்றார் அமைச்­­­சர். 2010ஆம் ஆண்டு முதல் 54,000 மலே­­­சி­­­யர்­­­கள் தங்கள் மலே­­­சி­­­யக் குடி­­­யு­­­ரிமையைத் துறந்­­­துள்­­­ள­­­னர் என்றார் அமைச்­­­சர். சென்றாண்டு தங்கள் மலே­­­சி­­­யக் குடி­­­யு­­­ரிமையைத் துறந்த­­­வர்­­­ களின் எண்­­­ணிக்கை 8,076. இந்தாண்டு மட்டும் ஒரு மாதத்­­­துக்கு சரா­­­ச­­­ரி­­­யாக 367 பேர், அதாவது மொத்தம் 1,102 பேர் தங்கள் மலே­­­சி­­­யக் குடி­­­யு­­­ரிமையைத் துறந்­­­துள்­­­ள­­­னர் என்று மலே­­­சி­­­யக் குடி­­­நுழைவுத் துறை தெரிவித்தது.

மலேசியாவின் துணைப்பிரதமரும் உள்துறை அமைச்­­­சருமான அகமது சாகித் ஹமிடி