இந்தோனீசிய அதிகாரிகளிடம் சிக்கிய மலேசியப் படகுகள்

இந்தோனீசிய அதிகாரிகளிடம் சிக்கிய மலேசியப் படகுகள்

1 mins read

கோலாலம்பூர்: - மலேசியாவைச் சேர்ந்த குறைந்தது 3 மீன்பிடிப் படகுகளை இந்தோனீசிய கடற்படையினர் பிடித்து வைத் துள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த மீன்பிடிப் படகுகளின் கேப்டன்களையும் இந்தோனீசியப் படையினர் கைது செய்திருப்பதாக வும் அமைச்சு கூறியது. இந்தோனீசியாவின் இச் செயல் இரு நாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வை மீறிய செயல் என்றும் மலேசியா குறிப்பிட்டுள்ளது. இந்த வட்டார கடல் பகுதியில் மீன்பிடிப் படகுகள் சம்பந்தப்பட்ட தகராறுகள் அதிகரித்துள்ள நிலையில் மலேசியாவின் மூன்று படகுகள் இந்தோனீசிய கடற் படையினரிடம் சிக்கியுள்ளன. இந்தச் சம்பவம் மலேசிய கடற்பகுதியில் நடந்திருக்கலாம் என இதுவரை கிடைத்த தகவல் தெரிவிக்கிறது என்று மலேசிய வெளியுறவு அமைச்சு அதிகாரி கள் கூறினர்.