இக்வடோர் நிலநடுக்கத்தில் குறைந்தது 413 பேர் மரணம்

இக்வடோர் நிலநடுக்கத்தில் குறைந்தது 413 பேர் மரணம்

1 mins read

குவிட்டோ: இக்வடோரை சனிக்கிழமை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 413 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட அந்நாட்டு அதிபர் ராஃபல், மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பில்லியன் டாலர் கணக்கில் செலவாகலாம் என்று கூறியுள்ளார். கடந்த 70 ஆண்டுகளில் இது மிகப் பெரிய பேரிடர் என்று அவர் சொன்னார்.