ஜெருசலத்தில் குண்டு வெடிப்பு: 21 பேர் காயம்

ஜெருசலத்தில் குண்டு வெடிப்பு: 21 பேர் காயம்

1 mins read
5441a80b-fe98-49ec-a22a-510c5b3f2837
-

ஜெருசலம்: இஸ்ரேலின் ஜெருசலம் நகரில் ஒரு பேருந் தில் குண்டு வெடித்ததில் குறைந்தது 21 பேர் காயம் அடைந்ததாக இஸ்ரேலியப் போலிசார் கூறினர். ஜெருசலத்தின் புறநகர் பகுதி யில் திங்கட்கிழமை குண்டு வெடித்ததாகவும் அதனைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் தீப்புகை மூட்டம் சூழ்ந்திருந்த தாகவும் தகவல்கள் கூறுகின்றன. அந்த குண்டு வெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இத்தாக்குதலுக்குக் காரண மானவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரி வித்துள்ளார். பயங்கரவாதத்தை துடைத்தொழிக்கும் போராட்டத் தில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

பயணிகள் இருந்த ஒரு பேருந்தில் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து அந்தப் பேருந்து தீப்பற்றி எரிகிறது. இதனால் தீப்புகை அப்பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்