மலாக்கா: கைவிலங்கிட்டு ஆற்றில் மூழ்கடிக்கப்பட்ட 26 வயது ராணுவ கமாண்டோ அதிகாரி ஆச்சரியகரமாக உயிரோடு மீட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கோணக் காதல் இந்தக் கொலை முயற்சிக்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. சுங்கய் உடாங் ராணுவ முகாமில் அந்த கமாண்டோ அதிகாரி இன்னொரு ஆணின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஏற்பட்ட வன்மம் இந்தக் கொலை முயற்சியில் முடிந்தது. அதே முகாமில் இன்னொரு பிரிவில் அந்தப் பெண்ணின் கணவரும் பணியாற்றிவந்தார்.
கொலை முயற்சியில் முடிந்த முக்கோணக் காதல்
1 mins read

