வடகொரியா மீண்டும் ஏவுகணையை சோதனை செய்ததாகக் குற்றச்சாட்டு

வடகொரியா மீண்டும் ஏவுகணையை சோதனை செய்ததாகக் குற்றச்சாட்டு

1 mins read

சோல் : வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணையைக் கடல் பகுதியில் செலுத்தி சோதனை செய்ததுபோல் தெரிகிறது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. ஆளும் கட்சியின் முக்கிய கூட்டம் நடப்பதற்கு முன்னதாக வடகொரியா அணுவாயுத சோதனை மற்றும் ஏவுகணைச் சோதனையை மேற்கொள்ளக்கூடும் என்ற தென்கொரியா கவலைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்துலக நாடுகளின் கண்டனத்தையும் மீறி வடகொரியா தொடர்ந்து இத்தகைய சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.