கெர்ரி: போர் நிறுத்தம் இனி இல்லை

கெர்ரி: போர் நிறுத்தம் இனி இல்லை

1 mins read

அலெப்போ: சிரி­யா­வின் அலெப்போ நகரில் கடந்த ஒரே வாரத்­தில் மருத்­து­வ­மனை­யில் 50 பேர் உள்­ளிட்ட நூற்றுக்கணக்­கான பொது­மக்­கள் இறந்­துள்ள நிலையில் போர் நிறுத்த உடன்­பாட்டை இனி நீட்­டிப்­பது கடினம் என்று அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஜான் கெர்ரி தெரி­வித்­துள்­ளார். சிரி­­­யா­­­வில் அதிபர் ஆசாத் தலைமை­­­யில் ஆட்சி நடை­­­பெ­­­று­­­கிறது.

அந்த நாட்டின் பெரும் ப­­­குதி ஐஎஸ் பயங்கர­­­வா­­­தி­­­களின் கட்­­­டுப்­­­பாட்­­­டில் உள்ளது. மேலும் மிதவாத எதிர்க்­­­கட்­­­சி­­­களின் கட்­­­டுப்­­­பாட்­­­டிலும் சில பகு­­­தி­­­கள் உள்ளன. இந்­­­நிலை­­­யில் அமெ­­­ரிக்கா, ரஷ்­­­யா­­­வின் முயற்­­­சி­­­யால் அதிபர் ஆசாத்­­­துக்­­­கும் மிதவாத எதிர்க்­­­கட்­­­சி­­­களுக்­­­கும் இடையே அண்மை­­­யில் சண்டை­­­நி­­­றுத்­­­தம் அம­­­லுக்கு வந்தது. அதன்­­­படி தலை­­­ந­­­கர் டமாஸ்­­­கஸ், லத்திகா உள்­­­ளிட்ட பகு­­­தி­­­களில் போர் நிறுத்தப்பட்டிருந்தது.

அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் லாரி ஒன்று நேற்று முன்தினம் போராளிகள் வசம் இருக்கும் டெயிர் மாலா கிராமத்தைக் கடந்து மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் நகரின் புறநகர் பகுதியைத் தாண்டி டல்பிசே நகருக்குச் சென்றது. படம்: ஏஎஃப்பி