சுமார் நான்கு மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று பேராக் மாநிலம் கம்போங் சுங்கை கெராங் செம்பனை எண்ணெய் பயிர்த்தோட்டத்தில் நேற்று பிடிபட்டது. கிட்டத்தட்ட 100 கிலோ எடையுள்ள இந்தப் பெண் பாம்பைப் பிடிக்க குடிமைத் தற்காப்புத் துறையினர் முயன்றபோது அது தனது கூட்டை உடலால் சுற்றி வளைத்துத் தற்காத்தது. செம்பனை மரம் ஒன்றின் அடியில் பொந்து ஒன்றில் கட்டப்பட்டு இருந்த கூட்டினுள் 90 பாம்பு முட்டைகள் இருந்தன. மலைப்பாம்பும் முட்டைகளும் பாடாங் தெராப்பில் உள்ள குடிமைத் தற்காப்புத் துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. படம்: மலேசிய ஊடகம்
முட்டைகளை நெருங்கவிடாமல் தற்காத்த 100 கிலோ பாம்பு
1 mins read
-

