பாரிஸ்: ஐரோப்பாவின் பல பகுதிகளில் மின்னல் தாக்கிய தில் ஒருவர் பலியானதாகவும் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாரிஸில் பூங்கா ஒன்றில் நடந்த பிறந்தநாள் விருந்தில் பங்கேற்ற பதினொரு பேர் ஒரு மரத்திற்கு அடியில் தஞ்சம் புகுந்தபோது மின்னல் தாக்கியதில் காயம் அடைந்தனர். ஜெர்மனியில் நடைபெற்ற சிறுவர்கள் காற்பந்து விளையாட்டுப் போட்டி யின்போது மின்னல் தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளனர். போலந்தின் தெற்குப் பகுதியில் ஒருவர் மலையேறிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறின.
ஐரோப்பாவில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்
1 mins read

