சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவின் மேடானுக்கும் இடையேயான விமானச் சேவையை 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தோனீசியாவின் முக்கிய விமான நிறுவனமான கருடா மீண்டும் தொடங்கவுள்ளது. பொதுமக்களிடையே அதிக வரவேற்பு கிடைக்காததால் 2002ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் - மேடான் விமானச் சேவை அதற்கு அடுத்த ஆண்டிலேயே விலக்கிக்கொள்ளப்பட்டது. தினமும் காலை 11.15 மணிக்கு சாங்கி விமான நிலையத்திலிருந்து கிளம்பும் விமானம் குவாலனாமு அனைத்துலக விமான நிலையத்துக்கு உள்ளூர் நேரப்படி 11.45 மணிக்குச் சென்றடையும். அங்கிருந்து பிற்பகல் 11.30 மணிக்குக் கிளம்பும் விமானம் சிங்கப்பூர் நேரப்படி மாலை 4 மணிக்கு வந்து சேரும்.
சிங்கப்பூர் - மேடான் இடையே மீண்டும் கருடா விமானச் சேவை
1 mins read

