சீனப் படகைத் தடுத்து வைத்த இந்தோனீசியா

1 mins read

ஜகார்த்தா: தென் சீனக்­க­ட­லில் நட்டுனா தீவு­களுக்கு அப்பால் இந்­தோ­னீ­சிய தண்­ணீ­ரில் சீன மீன்­பி­டிப் படகை­யும் அதன் பணிக்­கு­ழுவை­யும் இந்­தோ­னீ­சி­யா­வின் கடற்­படை தடுத்து வைத்­தி­ருக்­கிறது. மார்ச் மாதம் முதல் நடை­பெறும் இத்தகைய மூன்றா­வது சம்ப­வம் இது. சென்ற வெள்­ளிக்­கிழமை கடற்­ப­யிற்­சி­யின்­போது இந்­தோ­னீ­சியா பகு­தி­யில் இந்த மீன்பிடி படகு தென்­பட்­ட­தாக துணை தளபதி ஆரிஃப் பத்­ருத்­தீன் கூறினார். எச்­ச­ரிக்கை துப்­பாக்கி சூடு­களுக்­குப் பிறகும் மீன்பிடி படகு விலகிச் செல்­லா­த­தால் படகைத் தடுத்து நிறுத்­துவதற்காக படகின் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­ட­தாக அவர் விளக்­கினார். தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் படகின் பணிக்­கு­ழு­வில் ஒரு பெண் இருப்­ப­தா­க­வும் விசாரணை தொடர்­வ­தா­க­வும் அவர் கூறியுள்ளார்.