பெய்ஜிங்: தென்சீனக் கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய தீவுகளைச் சுற்றிலும் சீனா ராணுவப் பயிற்சியை மேற்கொள்ளவிருக்கிறது. தென்சீனக் கடல் விவகாரம் குறித்து சீனாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையேயான தகராறு அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள வேளையில் இந்த வழக்கு குறித்த தீர்ப்பை அனைத்துலக நீதிமன்றம் வரும் ஜூலை 12ஆம் தேதி அறிவிக்கவுள்ளது. இந்நிலையில் சீனா ராணுவப் பயிற்சியை மேற்கொள்ளவிருக்கிறது. வரும் ஜூலை 5ஆம் தேதி முதல் ஜூலை 11ஆம் தேதி வரை அப்பயிற்சியை சீனா மேற்கொள்ள இருக்கிறது. வியட்னாம், மலேசியா, புருணை, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளும் அந்த கடல் பகுதிக்கு உரிமை கொண்டாடி வருகின்றன.
தென்சீனக் கடல் பகுதியில் சீனா மேற்கொள்ளவிருக்கும் பயிற்சி
1 mins read

