அப்துல் கனி: மகாதீரின் புதிய கட்சியுடன் தொடர்பு இல்லை

அப்துல் கனி: மகாதீரின் புதிய கட்சியுடன் தொடர்பு இல்லை

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது தொடங்கவுள்ள புதிய கட்சிக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முன்னாள் அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அப்துல் கனி பட்டேல் தெரிவித்துள்ளார். திரு மகாதீர் புதிய கட்சி தொடங்கவிருப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளவர்களில் தனது பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் அது பொய் என்றும் திரு கனி கூறியுள்ளார்.