டமாஸ்கஸ்: அலெப்போ நகரைக் கைப்பற்றி கடந்த ஒரு வாரமாக முற்றுகையிட்டிருந்த அரசாங்கப் படைகளுக்கு எதிராகக் கடுமையாகப் போரிட்டு வந்த சிரியப் போராளிகள் அந்த நகருக்குள் நுழைவதற்கான வழியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறியுள்ளனர். அதன் எதிரொலியாக அங்கு வசிக்கும் சிரிய மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ஆனால், சிரியப் போராளிகளின் இந்த அறிவிப்பில் உண்மை இல்லை எனவும் பீரங்கித் தளத்தின்மீது தாக்குதல் நடத்திய அவர்கள் மீது பலமான எதிர்த் தாக்குதல் தொடுத்து அங்கிருந்து விரட்டியடித்துவிட்டதாகவும் அர சாங்கப் படையினர் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, போராளிகள் கிழக்கு அலெப்போவில் உள்ள அவர்களது தளபதிகளுடன் தொடர்பு கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளனர் என இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு நுழைவதற்கான பாதுகாப்பான வழியை போராளிகள் இன்னும் அமைக்கவில்லை என் றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். போராளிகளின் வசமிருந்த அலெப்போவின் பகுதிகளை அரசாங்கப்படைகள் சென்ற மாதம் கைப்பற்றின. சுமார் 250,000 சிரிய மக்கள் அந்தப் பகுதியில் அரசுப் படைகளின் முற்றுகையின்கீழ் இருந்தனர். இதற்கிடையே, சிரியாவின் முக்கிய நகரமான மன்பிஜை அமெரிக்கப் படைகளின் உதவி யுடன் குர்திய வீரர்கள் கைப்பற்றி யுள்ளதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன.
அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டில் சிக்கியிருந்த சிரிய மக்கள், போராளிகள் அந்த முற்றுகையைத் தகர்த்த தகவலறிந்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்தனர். படம்: ஏஎஃப்பி

