டென்பசார் (இந்தோனீசியா): இந்தோனீசியாவின் பாலியில் உள்ள ஹாலிடே தீவில் தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்ததாக தீவிரவாதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கடந்த வாரம் சுமத்ராவில் கைது செய்யப்பட்டார். அதனையொட்டி இந்தோனீசிய போலிஸ் பாலியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. தீவிரவாதி ஒருவனின் கைது நடவடிக்கை, அவர் பாலியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த தகவல் ஆகியவற்றைத் தொடர்ந்து பாலியின் நுழைவாயில்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த மாகாண போலிஸ் உயர் அதிகாரி சுஜெங் பிரியண்டோ கூறினார். பாலியில் உள்ள சிறிய துறை முகங்கள் வாயிலாகக்கூட தீவிர வாதிகள் நுழையக்கூடும் என்பதால் ஒன்றுவிடாமல் அனைத்து நுழைவாயில்களும் கண்காணிக்கப்படுவதாக அந்த அதிகாரி தெரி வித்தார். சந்தேகத்தின் பேரில் சுமத்ராவில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதி உண்மையிலேயே பாலியில் தாக்குதல் நடத்தத் திட்ட மிட்டிருந்தானா என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பயங்கரவாதத் தடுப்புப் போலிசார் கூறினர்.
கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழியின் வீட்டில் மேற்கொண்ட சோதனையின்போது, ஏராளமான வெடி பொருட்களை போலிசார் கைப்பற்றினர். "சந்தேகப் பேர்வழியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவன் பாலியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் கூறினான் என்று தேசிய போலிஸ் பேச்சாளர் அகுல் ரியாண்டோ கூறினார். கடந்த 2002 ஆம் ஆண்டு பாலியின் உல்லாசத் தீவு ஒன்றில் உள்ளூர்த் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 202 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் அதிகமானோர் ஆஸ்திரேலி யர்கள். மத்திய கிழக்கிலுள்ள ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவின் ஈர்ப்பு இந்தோனீசியாவில் அண்மைய காலத்தில் தலைதூக்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்தோனீசியத் தலை நகரமான ஜகார்த்தாவில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பிலான வெடிகுண்டு, துப்பாக்கிச் சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் நால்வர் கொல்லப் பட்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட போலிசாரின் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் பலர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலை யில் தீவிரவாதிகள் எவ்வழியிலும் பாலிக்குள் நுழைந்து தாக்குதல் செயலில் ஈடுபடக்கூடும் என போலிஸ் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.

