பேங்காக்: பேங்காக் ஆளுநர் சுகும்பகந் பரிபட்ராவிடம் ஊழல் புகார் தொடர்பில் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா, தமது அவசர அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்துள்ளார். விசாரணை இன்னும் முடிவுறாத நிலையில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். திரு சுகும்பகந் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். அவர் தற்போது தென்கொரியாவுக்கு பயணம் சென்றுள்ள வேளையில் அவர் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார். தாய்லாந்தில் ராணுவம் 2014ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது முதல் திரு பிரயுத் பல காரணங்களுக்காக அந்த அதிகாரத்தை பயன்படுத்தி வந்துள்ளார்.
ஊழல் விவகாரம்: பேங்காக் ஆளுநர் தற்காலிக பணிநீக்கம்
1 mins read

