பிரசல்சில் மீண்டும் பயங்கரம்

பிரசல்சில் மீண்டும் பயங்கரம்

1 mins read

பிரசல்ஸ்: பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடந்த மார்ச் மாதம் அந்நாட்டின் விமான நிலையத்தின் மீதும் பெருநகரப் பகுதியின் மீதும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மேற் கொண்ட தாக்குதலில் 32 பேர் மரணமடைந்தனர். அதிலிருந்தே அந்நாட்டில் பயங் கரவாதத் தாக்குதல் மீண்டும் எந் நேரமும் நடக்கலாம் என்ற அச்சத் தில் அங்கு பாதுகாப்பு படையினர் முழு விழிப்புநிலையில் வைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று அதி காலை அந்நாட்டு நேரப்படி 2.30 மணிக்கு பிரசல்சில் உள்ள குற்ற வியல் ஆய்வு நிலையத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பொழுது தடயவியல் பரி சோதனைகள் மேற்கொள்ளப்படும் அந்த ஆய்வு நிலையத்தின் தடுப்பு கள் மீது மூன்று வாகனங்கள் மோதியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அதிலிருந்து ஒரு வரோ ஒன்றுக்கு மேற்பட்டவர் களோ அங்குள்ள சோதனைக் கூடங்களைக் குறிவைத்து வெடி குண்டை வெடிக்கச் செய்ததாக அறியப்படுகிறது.