தொழிலதிபர் காருக்கு தீ வைத்தவர் கைது

தொழிலதிபர் காருக்கு தீ வைத்தவர் கைது

1 mins read
dea4adbb-d8dd-4940-9859-55e8d83e68cd
-

கோலாலம்பூர்: மலேசியத் தலை நகருக்கு வடக்கே உள்ள கெப்போங் துணை நகரத்தில் தொழிலதிபர் ஒருவரின் காருக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணிக்கு தனது காரை நிறுத்திவிட்டுச் சென்ற அந்தத் தொழிலதிபரின் கார் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட வுள்ளது. தீக்கிரையான மெர்சிடிஸ் கார். படம்: தி ஸ்டார்