பாரிஸ்: டோட்ரெ டேம் தேவாலயத்துக்கு அருகில் காரில் 7 எரிவாயுத் தோம்புகளை ஏற்றியதாகக் கைது செய்யப்பட்ட மூன்று பெண்கள் பாரிசில் உள்ள 'கேர் டி லையோன்' ரயில் நிலையத்தைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாக பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பெண்களில் ஆக இளையவரான 19 வயதுப் பெண்ணின் தந்தையின் கார் அது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்த ஆடவர் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாகப் போராட விரும்பியவர் என்று ஏற்கெனவே சந்தேகிக் கப்பட்டவர். மூன்று பெண்களில் ஒருவர் கைது செய்ய முற்பட்ட போலிசாரைத் தாக்கினார். அதனைத்தொடர்ந்து போலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் காயமுற்றார். பயங்கரவாதக் கொள்கைகள் கொண்ட மூவரில் மற்ற இருவரும் 39, 23 வயதான பெண்கள்.

