கோலாலம்பூர்: மலேசியாவில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்று கணிக்கப்படுகிறது. மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், ஆளும் கட்சியான அம்னோவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் ஆகியோர் அண்மைய வாரங்களில் நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். அந்த சமயத்தில் இளம் வாக்காளர்களையும் அவர்கள் சந்தித்து உரையாடியுள்ளதாகக் கூறபப்டுகிறது. இவற்றைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் 2108ஆம் ஆண்டு மத்தியில் நடைபெறவேண்டிய தேர்தல் முன்னதாகவே நடத்தப்படலாம் என கவனிப் பாளர்கள் கருத்துரைக்கின்றனர். சில அம்னோ அதிகாரிகள் மார்ச் மாதத்தில்கூட தேர்தல் நடத்தப் படலாம் என்று கூறியுள்ளனர்.
'1எம்டிபி' சர்ச்சை தொடர்பில் 63 வயதான திரு நஜிப் பிரதமர் பதவியைத் துறக்க வேண்டுமென கடந்த சில மாதங்களில் பல தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அவரை முன் நிறுத்தி தேர்தலை எதிர்கொண்டால் வெற்றி பெறுவதில் சிரமம் இருக்கலாம். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றால் அவருடைய தலைமை பற்றிய சந்தேகங்களைப் போக்கு வதுடன் 2020ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை வளர்ச்சியடைந்த நாடாக ஆக்கக்கூடிய பொரு ளியல் சீர்திருத்தத்தைச் செயல் படுத்த அவருக்கு வாய்ப்பாக அது அமையும். எதிர்க்கட்சிகளிடையே ஒற் றுமை இல்லாததால் தேர்தல் முடிவுகள் அம்னோவுக்குச் சாதகமாக இருக்கலாம் எனவும் கவனிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

