சோல்: அதிக சக்திவாய்ந்த அணு ஆயுதம் ஒன்றை வடகொரியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. வெவ்வேறு அளவுகளில் எரிபடைகளைத் தயாரித்து ஏவுகணையில் பொருத்தி அணு ஆயுதமாக உருவாக்கக்கூடிய அதி நவீன ஆற்றல் பெற்றிருப்பதாக வடகொரியா கூறியிருப்பது அதன் எதிரி நாடுகளுக்குக் கவலை அளிப்பதாக இருக்கிறது. வடகொரியா அத்தகைய நவீன ஆயுதங்கள் செய்வதற்கான ஆற் றல் பெற்றிருப்பதற்கு அறிவியல் பூர்வ ஆதாரம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சிறிய அளவிலான எரிபடை யைத் தயாரிப்பதில் வடகொரியா வெற்றி பெற்றிருப்பதாகக் கடந்த ஏப்ரல் மாதத்தில் தென்கொரியா தெரிவித்தது. சிறிய அளவிலான எரிபடை, ஏவுகணைத் தளங்களை வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சென்ற மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டன. இந்த வாரத் தொடக்கத்தில் ரோடோங் எனப்படும் 2,000 கி.மீ. தூரம் பாயக்கூடிய ஏவுகணை வடகொரியாவில் சோதனை செய்யப்பட்டது. வடகொரியா தனது ஐந்தாவது ஏவுகணைச் சோதனையை நேர்று மேற்கொண்டதை அடுத்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
வடகொரியாவின் இச்செயல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்போவதாக அமெ ரிக்க, ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள் கூறியுள்ளனர். சீனாவில் உள்ள வடகொரியத் தூதரிடம் அரசதந்திர முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவிருப்பதாக சீனா தெரிவித்தது. 'ஏற்றுக்கொள்ள இயலாத செயல்' என ஜப்பானும் 'அனைத் துலக அளவில் வடகொரியா மேலும் தனிமைப்படுத்த வழி வகுக்கும்' என தென்கொரியாவும் குறிப்பிட்டுள்ளன.

