இந்தோனீசிய அதிகாரிகள் பிலிப்பீன்ஸ் கடற்பகுதியில் நுழைய அனுமதி

இந்தோனீசிய அதிகாரிகள் பிலிப்பீன்ஸ் கடற்பகுதியில் நுழைய அனுமதி

1 mins read

ஜகார்த்தா: கடற்கொள்ளை­யர்­கள் இந்­தோ­னீ­சிய கடற்­ப­கு­தி­யில் ஆரம்­பித்து அனைத்­து­லக கடற்­ப­கு­திக்­குள் நுழைந்தால் அவர்­களைப் பிடிக்­கும் பணியில் ஈடு­பட்­டுள்ள இந்­தோ­னீ­சிய அதி­கா­ரி­கள் பிலிப்­பீன்ஸ் எல்லைக்­குள் நுழை­ய­லாம் என பிலிப்­பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்­டர்ட்டே கூறி­யுள்­ளார். தென்­ சீ­னக் கடல் பகு­தி­யில் கடற்­கொள்ளை­யர்­கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வரு­வ­தால் இந்­தோ­னீ­சியா, மலேசியா, பிலிப்­பீன்ஸ் ஆகிய நாடுகள் ஒன்­றிணைந்து சுற்­றுக்­கா­வல் பணியில் ஈடு­படு­வது, நாடுகள் தங்க­ளது எல்லைக்­குள்ளே இடர்­காப்பு நிலை­யங்களை அமைத்து அவ­ச­ர­கா­லங்களில் செயல்­படு­வது ஆகி­ய­வற்றை மேற்­கொள்ள இருக்­கின்றன. இதன் தொடர்­பில் இந்­தோ­னீ­சிய அதிபர் ஜோக்கோ விடோ­டோ­ வு­டன் உரையாட இருப்­ப­தாக இந்­தோ­னீ­சி­யா­வுக்­குச் சென்­றுள்ள டுட்­டர்ட்டே கூறி­யுள்­ளார்.