பெற்றோரைக் கொன்றதை மறைக்க அக்கம்பக்கத்தார் 17 பேர் கொலை

பெற்றோரைக் கொன்றதை மறைக்க அக்கம்பக்கத்தார் 17 பேர் கொலை

1 mins read

பெய்ஜிங்: தென்மேற்குச் சீனாவில் பணம் தொடர்பான தகறாரில் பெற்றோரைக் கொன்ற ஒருவர் அந்தக் குற்றத்தை மறைக்கும் நோக்கில் அக்கம்பக்கத்தார் 17 பேரைக் கொன்று குவித்துள்ளார். பலியான அக்கம்பக்கத்தாரில் ஆக இளையவருக்கு மூன்று வயது; ஆகப் பெரியவருக்கு 72 வயது. இந்தத் தகவலை வெளியிட்ட ‌ஷின்ஹுவா, அது தொர்பாக வேறு தகவல்களை வெளியிடவில்லை. 20களில் இருக்கும் யாங் சிங்பெய் எனும் சந்தேக நபரான அந்த இளையர் சென்ற புதன்கிழமை சொந்த ஊருக்குச் சென்றார். அதற்கு அடுத்த நாள் யுன்னான் மாவட்டத்தில் உள்ள குன்மிங்கில் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.