அலெப்போ: 'ஒயிட் ஹெல்மெட்ஸ்' என்றழைக்கப்படும் சிரியாவின் குடிமைத் தற்காப்புக் குழு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசுக்கு நியமிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிற தலைக்கவசம் அணிந்து உதவிப் பணிகளில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான தொண்டூழியர்களைக் கொண்டது இந்தக் குழு (படம்). சிரியாவில் நடந்து வரும் போர் நடவடிக்கைகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்கு இவர்கள் உதவி வருகின்றனர். இடிபாடுகளில் இருந்து காயமுற்றோரை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிப்பது, சடலங்களை மீட்பது போன்ற பணிகளிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். இந்தத் தொண்டூழியர் குழுவுக்கு நோபெல் பரிசு வழங்குமாறு ஆயிரக்கணக்கானோர் இணையம் வழியாக நோபல் பரிசுக் குழுவுக்கு பரிந்துரைத்தனர். நோபெல் பரிசு குறித்த முடிவுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும். படம்: ஏஎஃப்பி
நோபெல் பரிசுக்கு குடிமைத் தற்காப்புக் குழு நியமனம்
1 mins read
-

