கோலாலம்பூர்: மொரிஷியஸில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் உடைந்த ஒரு பகுதி மலேசியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயமாய் மறைந்த மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH370 விமானத் தினுடையதுதான் என்று மலேசியா தெரிவித்துள்ளது. அந்த போயிங் 777ரக விமானம் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் மொத்தம் 239 பேருடன் கோலாம்பூரிலிருந்து பெய்ஜிங் நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது காணாமற்போனது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் அந்த விமானம் எந்த இடத்தில் விழுந்து நொறுங்கியது என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது மொரிஷியஸில் கண்டெடுக்கப்பட்ட விமானப் பகுதி மலேசிய விமானத்தின் இறக்கைப் பகுதியைப் போன்று இருக்கிறது என்று ஆஸ்திரேய அதிகாரிகள் கூறியிருப்பதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். ஏற்கெனவே இரு தீவுகளில் கண்டெடுக்கப்பட்ட உடைந்த விமானப் பாகங்கள் காணாமல்போன விமானத்தினுடையவைதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மொரிஷியசில் காணப்பட்ட விமானப் பாகம் MH370 விமானத்தினுடையது
1 mins read
-

