வெளிநாடுகளில் சட்டத்தைப் பின்பற்ற அமைச்சு அறிவுறுத்து

வெளிநாடுகளில் சட்டத்தைப் பின்பற்ற அமைச்சு அறிவுறுத்து

1 mins read

வெளி­நா­டு­களுக்­குச் செல்லும் போது அந்­நாட்­டுச் சட்ட திட்­டங்களைப் பின்­பற்றி நடந்து கொள்­ளு­மாறு வெளி­யு­றவு அமைச்சு சிங்கப்­பூ­ரர்­களை அறி வுறுத்­தி­யுள்­ளது. வெளி­நா­டு­களில் சில சிங்கப்பூ ரர்கள் கைதா­னதைத் தொடர்ந்து வெளி­யு­றவு அமைச்சு நேற்று அதன் இணை­ய­த­ளத்­தில் வெளி­யிட்ட அறிக்கை­யில் இதனைத் தெரி­வித்­தது. இத்­தகைய அறி­வு­றுத்­தலை வெளி­யு­றவு அமைச்சு வெளியிட்­டி­ருப்­பது இதுவே முதன் முறை. அண்மைய மாதங்களில் பல சிங்கப்­பூ­ரர்­கள் வெளி­நா­டு­களில் போதைப் பொருள், குடி­நுழைவு தொடர்­பான குற்­றங்களுக்­கா­கக் கைதா­னதைத் தொடர்ந்து வெளி­யு­றவு அமைச்சு அக்கறை கொண் ­டுள்­ள­தாக அறிக்கை­யில் குறிப்­பிட்­டது. எனினும் மேற்­கண்ட குற் ­றங்களுக்­காக எத்தனை சிங்கப்­பூ­ரர்­கள் கைதானார்­கள் எனும் தகவலை வெளியுறவு அமைச்சு வெளி­யி­ட­வில்லை.

வெளி­நாட்­டுச் சட்­ட­திட்­டங்களை மீறுவோர் உட­ன­டி­யாக கைது நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப் பட்டு அவர்­கள் தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­ப­ட­லாம் என்றும் சில நாடு­களில் வழக்கு பல மாதங்கள் நீடிக்­க­லாம் என்றும் அறிக்கை­யில் அமைச்சு தெரி­வித்­தது. வெளி­நா­டு­களில் சிங்கப்­பூ­ரர்களின் குற்றச்செயல்­கள் நிரூ­பிக்­கப்­பட்­டால் அவர்­களுக்கு மிகு ­தி­யான அப­ரா­தம் அல்லது நீண்ட கால சிறைத்தண்டனை அல்லது இரண்­டும் விதிக்­கப்படலாம் என்றும் போதை பொருள் தொடர்­பான குற்­றங்களுக்கு மரண தண்டனை கூடக் கிடைக்­க­லாம் என்றும் வெளி­யு­றவு அமைச்சு சுட்­டி­யது.