பத்து காஜாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது

பத்து காஜாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது

1 mins read

ஈப்போ: பத்து காஜாவில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதில் 21 ரயில் பெட்டிகள் சாய்ந்ததாக ரயில்வே அதிகாரிகள் கூறினர். நல்லவேளையாக உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லை என்று கூறப்பட்டது. ரயில் ஓட்டுநர்கள் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.