விசாரணைக்கு தென்கொரிய அதிபர் இணக்கம்

விசாரணைக்கு தென்கொரிய அதிபர் இணக்கம்

1 mins read

சோல்: தென்கொரிய அதிபர் பார்க் குவென் ஹை அரசாங்கத்தின் மீது ஊழல் புகார்கள் கூறப்படும் வேளையில் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியதற் காக அவர் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். அதிபரின் நீண்டகால சிநேகிதியான சோய் சூன் சில் தனது நட்புறவைப் பயன்படுத்தி அரசாங்கத்தில் அவரது செல்வாக்கை பெருக்கிக் கொண்டதுடன் சொந்த ஆதாயத்திற்காக ஊழல் விவகாரத்தில் ஈடுபட்டதாக புகார்கள் கூறப்பட்டதைத் தொடர்ந்து சோய் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.