சிரியாவில் போராளிகள் வசம் உள்ள அலெப்போ நகரைக் கைப்பற்ற அரசாங்கப் படை கடந்த ஒரு வார காலமாக கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. சிரியா விமானங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசித் தாக்கி வருவதால் அங்கு பல வீடுகளும் கட்டடங்களும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இந்த சண்டையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 300 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சிரியாவில் பல ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர மேற்கத்திய நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. படம்: ஏஎஃப்பி
அலெப்போவில் அரசாங்கப் படை குண்டுவீச்சு
1 mins read
-

