சீனா, தென்கொரியா, ஜப்பான் சந்திப்பு தள்ளிவைப்பு

சீனா, தென்கொரியா, ஜப்பான் சந்திப்பு தள்ளிவைப்பு

1 mins read

தோக்கியோ: சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இம்மாதம் ஜப்பானில் சந்தித்துப் பேச திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் தென்கொரிய அதிபர் பார்க் குவென் ஹைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக இந்தப் பேச்சுவார்த்தையை இன்னொரு தேதிக்கு தள்ளிவைக்க தீர்மானித்ததாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கி‌ஷிடா கூறினார். அடுத்த ஆண்டு உரிய நேரத்தில் தாங்கள் சந்தித்துப் பேசவிருப்பதாக அவர் சொன்னார்.