நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக கடந்த 7 ஆண்டு களுக்கும் மேலாக தாக்குதல் உள்ளிட்ட எதிர்ப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்நாட்டின் பொருளி யல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக 'போர்னோ' மாநிலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் உணவின்றி தவிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தீவிரவாதிகளின் தாக்குதலால் ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். சுமார் 20,000 பேர் தாக்குதல்களில் உயிரிழந்தனர். உணவில்லாத தால் ஏராளமான குழந்தைகள் பசி பட்டினியால் தவிக்கின்றனர்.
நைஜீரியாவில் பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள்
1 mins read

