வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் சீனா உருவாக்கிய ஏழு செயற்கைத் தீவுகளில் தற்காப்பு ஆயுதங்களை அந்நாடு பொருத்தியுள்ளதை துணைக்கோளப் படங்கள் காட்டுவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயல்படும் அனைத்துலக ஆய்வு நிலையம் ஒன்று தெரிவித்துள்ளது. சீனா அண்மைய ஆண்டுகளில் உருவாக்கிய செயற்கைத் தீவுகளில் ராணுவ சாதனங்களைப் பொருத்தி யிருப்பதை ஆசிய கடல்துறை அமைப்பு வெளியிட்ட துணைக் கோளப் படங்கள் காட்டுவதாக அனைத்துலக ஆய்வு நிலையம் கூறியது. தென்சீனக் கடல் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு ஆயத்தமாக சீனா அதன் தற்காப்பு முறைகளை வலுப்படுத்தி வருவதை இது உணர்த்துகிறது.
தென்சீனக் கடல் தீவுகளில் தற்காப்பை வலுப்படுத்தும் சீனா
1 mins read

