காற்று மாசு: சீனாவின் பல நகரங்கள் பெரிதும் பாதிப்பு

காற்று மாசு: சீனாவின் பல நகரங்கள் பெரிதும் பாதிப்பு

1 mins read

பெய்ஜிங்: சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளது. அந்த நகரில் வரும் 21ஆம் தேதி வரை எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல மேலும் 22 நகரங்களில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டிருப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பெய்ஜிங் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தியான்ஜின், ஹேபோ ஆகிய பகுதிகளில் காற்று மாசு அதிகரித்திருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த பழைய வாகனங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் முழுவதும் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.