ஜகார்த்தா: இந்தோனீசியத் தலை நகர் ஜகார்த்தாவில் இன்று நடை பெறவுள்ள புத்தாண்டுக் கொண் டாட்டங்கள் தொடர்பாக நகரின் பல்வேறு பகுதிகளில் 20,000 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இரண்டு பகுதிகள், மத்திய ஜாவாவிலுள்ள இரவு நேரங்களில் கார்கள் இல்லாத பகுதியான ஜாலான் எம்எச் தம்ரின், தெற்கு ஜாவா பகுதியான ஜாலான் சுதிர்மான் உட்பட பல இடங்களில் போலிசார் இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று கூறப்படுகிறது.