இந்தோனீசியர் 8 பேரை நாடுகடத்தியது மலேசியா

ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் தொடர்பான படங்களை தங்கள் கைத்தொலைபேசியின் 'வாட்ஸ் அப்' செயலியில் வைத்திருந்த எண்மரை இந்தோனீசி யாவுக்கு நாடு கடத்தியுள்ளது மலேசியா. அவர்களை இந்தோனீசியா வின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் பாத்தாம் தீவில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றிக் கூறிய ரியாவ் தீவுகளின் போலிஸ் தலைமை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சம்புடி குஸ்தியன், 16 வயதிலிருந்து 37 வயதுக்கு உட்பட்ட அந்த எட்டு பேரும் மேற்கு சுமத்ராவிலுள்ள 'ஸ்கோலா போன்டோக்' என்ற பள்ளியில் பயின்று வருவதாகவும் அவர்கள் அனைவரும் ரியாவ் தீவின் நடமாடும் போலிஸ் பிரிவு தலைமையகத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தார்.

அவர்கள் கடந்த செவ்வாய்க் கிழமையன்று சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி யில் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்று அவர் விவரித்தார். அவர்களின் தலைவன் என்று வர்ணிக்கப்படுபவனின் கைத்தொலைபேசியில் ஐஎஸ் கொடி, ஐஎஸ் இயக்கத்தின் நடவடிக்கை ஆகியவற்றுடன் 'சந்தன குண்டு வடிவம்' ஒன்றும் காணப்பட்டதாக திரு சம்புடி விளக்கினார். "அந்த எட்டுப் பேரின் கைத் தொலைபேசிகளை ஆராய்ந்த சிங்கப்பூர் அதிகாரிகள் அவர் களின் கடப்பிதழ்களில் 'தரை யிறங்க அனுமதியில்லை' என்று முத்திரை குத்தினர்," என்று அவர் மேலும் விவரித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!