‘பெரிய கப்பல்களை தாக்கும் கடற்கொள்ளையர்கள்’

மணிலா: பிலிப்பீன்ஸ் அருகே உள்ள கடல் பகுதியில் பெரிய வணிகக் கப்பல்களைக் குறிவைத்து ஆசிய கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி வருவதாக கடற்கொள்ளை சம்பவங்களுக்கு எதிரான வட்டார குழு ஒன்றின் தலைவர் கூறியுள்ளார். அக்கப்பல்களில் உள்ள சிப்பந்திகளைப் பிணைப்பிடித்துச் செல்வதன் மூலம் அதிப் பணத்தை பிணைப்பணமாகப் பெற முடியும் என்று கடற்கொள்ளையர்கள் நம்புவதால் அவர்கள் பெரிய கப்பல்களைத் தாக்குவதில் கவனம் செலுத்துவதாக வட்டார ஒத்துழைப்பு உடன்பாட்டுக் குழுவின் நிர்வாக இயக்குநர் மசஃபுமி குரோக்கி கூறினார். பிலிப்பீன்ஸ் கடல் பகுதியில் சென்ற ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கடற்கொள்ளையர்கள் 16 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கப்பல் சிப்பந்திகள் 48 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் வட்டார கடல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!