கோலாலம்பூர்: பிலீப்பீன்சை தளமாகக் கொண்டு செயல்படும் ஐஎஸ் குழுவில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைது செய்திருப்பதாக மலேசிய போலிசார் கூறினர். அவர்களில் 31 வயது பிலிப்பீன்ஸ் நாட்டவர் ஒருவர், பங்ளாதேஷ் நாட்டவர் இருவர், 27 வயது மலேசிய மாது ஒருவர் ஆவர். அந்த நால்வரும் இம்மாதம் 13ஆம் தேதிக்கும் 19ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் சாபாவிலும் கோலாலம்பூரிலும் கைது செய்யப்பட்டதாக போலிசார் கூறினர். மத்திய கிழக்கிலிருந்து வரும் பயங்கரவாதிகள் தங்கிச்செல்லும் இடமாக சாபாவை மாற்ற திட்டமிட்டிருந்த புதிய ஐஎஸ் குழுவில் அந்த நால்வர் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
சந்தேகப் பேர்வழிகள் நால்வர் மலேசியாவில் கைது
1 mins read

