ஜோகூர் அருகே படகு விபத்து: 10 பேர் மரணம்

ஜோகூர் அருகே படகு விபத்து: 10 பேர் மரணம்

1 mins read

ஜோகூர்பாரு: ஜோகூருக்கு அருகே ஒரு படகு மூழ்கியதில் 10 பேர் உயிரிழந்ததாக மலேசிய அதிகாரிகள் கூறினர். இந்தோனீசியாவிலிருந்து 40 பேரை ஏற்றிச்சென்ற படகு ஜோகூர் கடல் பகுதியில் மூழ்கியதாக மலேசிய கடல் துறை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் தெரிவித்தது. ஒன்பது சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தேடும் பணி தொடர்வதாக அதிகாரி ஒருவர் கூறினார்.