அமெரிக்கா செல்லும் பயணிகளைத் தாக்க திட்டமிட்டிருந்த ஐஎஸ் குழு

அமெரிக்கா செல்லும் பயணிகளைத் தாக்க திட்டமிட்டிருந்த ஐஎஸ் குழு

1 mins read

பிரசல்ஸ்: சென்ற ஆண்டு பிரசல்ஸ் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய ஐஎஸ் குழு அமெரிக்கா செல்லும் பயணிகளையும் யூதர்களையும் தாக்க திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. சென்ற ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அமெரிக்க விமானம் ஒன்றை தாக்க ஐஎஸ் போராளிகள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது என்று பெல்ஜியம் தலைமையிலான புலன்விசாரணைக் குழு கூறியது. இஸ்ரேல் செல்லவிருந்த யூதர்களைத் தாக்கவும் ஐஎஸ் போராளிகள் திட்டமிட்டிருந்ததாகவும் புலன்விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.