துருக்கியிலிருந்து திரும்பிய 17 இந்தோனீசியர்கள் கைது

துருக்கியிலிருந்து திரும்பிய 17 இந்தோனீசியர்கள் கைது

1 mins read

ஜகார்த்தா: துருக்கியிலிருந்து இந்தோனீசியாவுக்கு திரும்பிவந்த 17 பேரை இந்தோனீசிய அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவுக்கு உதவியதாக இந்தோனீசிய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் இந்தோனீசிய விமான நிலையத்தில் திங்கட்கிழமை வந்திறங்கிய அந்த 17 பேரையும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இந்தோனீசியப் போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.