சாபாவில் தேடும் பணி தொடர்கிறது

சாபாவில் தேடும் பணி தொடர்கிறது

1 mins read

கோத்தா கினபாலு: கடந்த சனிக் கிழமை மூழ்கிய படகிலிருந்து காணாமல் போன சீன சுற்றுலாப் பயணிகளையும் சிப்பந்திகளையும் தேடும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. குறிப்பாக சாபா, புருணை கடற்பகுதியில் தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கடற்துறை அதிகாரியான நூர் ஹபிசா ஹாசன், தேடி மீட்கும் பணி குறித்து விளக்கம் அளித்தார். சுமார் 3,000 முதல் 3,900 சதுர கடல் மைல் பரப்பளவில் தேடும் பணி பரவலாக்கப்பட்டுள் ளது என்றும் அவர் கூறினார். இந்நிலையில் புதன்கிழமை காலை புலாவ் மாமுடிக் நீரி ணையில் மிதந்த ஒரு சடலத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.