கோலாலம்பூர்: மலேசியாவின் பத்து மலை முருகன் கோயிலில் நாளை நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் உட்பட 1.6 மில்லியன் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டின் தைப்பூசத் திருவிழா 166வது ஆண்டாக நடைபெறுகிறது என்று விழாக் குழுத் தலைவரான ஆர். நடராஜா தெரிவித்தார். தைப்பூசத் திருவிழாவின்போது 1,500 காவல்துறை அதிகாரிகளும் 400 தொண்டூழியர்களும் பத்து மலையில் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். இந்த தைப்பூசத் திருவிழாவில் பிரதமர் நஜிப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய தைப்பூசத் திருவிழாவில் 1.6 மில்லியன் பேர் பங்கேற்கின்றனர்
1 mins read

