வாஷிங்டன்: அமெரிக்காவுக்குள் நுழைய குறிப்பிட்ட ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த குடிமக்க ளுக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு நீதி மன்றம் முட்டுக்கட்டை போட்டுள் ளது. இதனால் புதிய பயணத் தடை விதிப்பது குறித்து அதிபர் டிரம்ப் ஆராய்ந்து வருகிறார். 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத் தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று கூறினார். அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பயணத்தடைக்கு சியாட்டல் நீதி மன்றம் தடை விதித்தது. இதனை சான் ஃபிரான்சிஸ்கோ மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதி செய்தது.
டிரம்ப்: புதிய பயணத் தடை
1 mins read

