ஜகார்த்தா: புதிய ஆளுநரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஜகார்த்தாவில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் இந்தோனீசியாவுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தற்போது பதவியில் இருக்கும் சீன கிறிஸ்துவரான ஆஹோக் என அழைக்கப்படும் பாசுகி ஜாகாஜா புர்னாமாவை எதிர்த்து முஸ்லிம் இனத்தவர் இருவர் ஆளுநர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர். 2019ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் பதவி ஏற்பவர் யார் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் கோடிட்டுக் காட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஜகார்த்தாவில் இன்று ஆளுநர் தேர்தல்
1 mins read

