புத்ராஜெயா: பெட்ரா பிராங்கா விவகாரத்தில் அனைத்துலக நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றுமாறு கோரி மலேசியாவின் தரப்பில் வாதிட அனைத்துலக அளவிலும் உள்ளூரிலும் சட்ட நிபுணர்கள் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர். மலேசியாவின் தலைமைச் சட்ட அதிகாரி டான் ஸ்ரீ அபாண்டி அலி இந்த எழுவர் குழுவுக்குத் தலைமை தாங்க இருக்கிறார். சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் சட்டக் குழுவுக்கு இணையான நிபுணத்துவம், அறிவுத்திறன் கொண்ட திறன் மிகுந்த குழுவைக் கொண்டிருப்பதாக திரு அபாண்டி கூறியுள்ளார்.
பெட்ரா பிராங்கா: மலேசியாவைப் பிரதிநிதிக்க எழுவர் குழு
1 mins read

