கோலாலம்பூர்: வடகொரியத் தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் படுகொலை தொடர்பான வீடியோ ஆதாரம் சிக்கியுள்ள நிலையில் கோலாலம்பூர் மருத்துவமனையில் அவரது சடலம் வைக்கப்பட்டுள்ள சவக்கிடங்கில் ஆயுதம் ஏந்திய போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தந்தையின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக கிம் ஜோங் நாமின் மகன் கோலாலம்பூர் வந்திருப்பதாக ஊடகத் தகவல் கள் கூறுகின்றன. சென்ற வாரம் திங்கட்கிழமை கோலாலம்பூர் விமான நிலையத் தில் கிம் ஜோங் நாம் கொலை செய்யப்பட்டார்.
கோலாலம்பூர் மருத்துவமனையில் ஆயுதம் ஏந்திய போலிசார்
1 mins read

